tamilnadu

img

யோகியை விரட்டும்வரை கூட்டணி தொடரும்..

லக்னோ:

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை பதவியில் இருந்து அகற்றும் வரை, பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகள் இடையே கூட்டணி தொடரும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும், எங்கள் கூட்டணி உடையப் போவதில்லை, இந்த கூட்டணி நீண்ட தூரம் செல்லும். மத்திய ஆட்சியை அகற்றுவதோடு மட்டுமல்ல, மத்தியில் இருக்கும் மோடியையும், உத்தரப்பிரதேசத்தில் அவரது சீடரான யோகி ஆதித்யநாத்தையும் அதிகாரத்தில் இருந்து அகற்றும் வரை, எங்கள் கூட்டணி அமைதியாக இருக்காது. யோகி கோரக்பூரில் உள்ள அவரது கணித (கோவில்) பக்கம் திரும்பும் வரை எங்கள் கூட்டணி வீழ்ச்சியடையாது.இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.


;